தானியங்கள், பருப்பு வகைகள் காய்கறிகள் போன்றவற்றின் விலை உயர்வால் இந்திய மக்கள் பலரும், தங்களது பிரதான உணவான சாம்பார் சமைப்பதே இல்லை என்று ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது. அதேபோல் பழங்களின் விலை கூடியுள்ளதால் பண்டிகை நாட்களில் மட்டுமே பழங்களை மக்கள் வாங்குவதாகவும், காய்கறிகள் வாங்குவதற்கு செலவிடும் மாதாந்திர பட்ஜெட் ரூ.300 முதல் ரூ.500 வரை அதிகரித்துள்ளதாகவும், மக்களின் வாங்கும் திறன் வெகுவாக குறைந்துவிட்டதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.