தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்தவர் கைது

73பார்த்தது
தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்தவர் கைது
கடலூரில் பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளியை அடைத்து வைத்து ஜோசியம் பார்த்ததாக வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். கடலூர் தென்னம்பாக்கம் பகுதியில், 2 நாட்களுக்கு முன் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, தங்கர் பச்சான் கிளி ஜோசியம் பார்த்தார். கிளி ஜோசியத்தில், அழகுமுத்து அய்யனார் படம் வந்ததால், நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என கிளி ஜோசியக்காரர் கூறியுள்ளார். தங்கர் பச்சான் கிளி ஜோசியம் பார்த்த வீடியோ வைரலான நிலையில், ஜோசியரை வனத்துறை கைது செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி