வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு பெட்டிகளில் ஏறிய சாதாரண பயணிகள்

67பார்த்தது
வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு பெட்டிகளில் ஏறிய சாதாரண பயணிகள்
மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு பெட்டிகளில் ஏறிய கட்டுக்கடங்காத கூட்டத்தால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். இன்று(ஜூன் 14) சென்னை எழும்பூரில் இருந்து மதுரை வரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில், எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து மதியம் 2 மணிக்கு கிளம்பியது. அப்போது, முன்பதிவில்லாத பெட்டிகளில் கூட்டம் அதிகமாக இருந்ததால், அங்கிருந்த பயணிகள் முன்பதிவு பெட்டிகளில் ஏறத் தொடங்கினர். இதனால் அங்கும் பயங்கர கூட்டம் அலைமோதியது. சனி, ஞாயிறு மற்றும் திங்கள் என தொடர் விடுமுறையாலும், போதிய ரயில் வசதிகள் இல்லாததாலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

தொடர்புடைய செய்தி