சாதி மறுப்பு திருமணம் - மார்க்சிஸ்ட் அலுவலகம் சூறை

14598பார்த்தது
சாதி மறுப்பு திருமணம் நடத்தி வைக்கப்பட்டதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை அலுவலகம் மர்ம நபர்களால் சூறையாடப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டியில் 6 வருடமாக காதலித்து வந்த காதல் ஜோடிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்து வைக்கப்பட்டது. இதையடுத்து, வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞருடன் திருமணம் செய்து வைத்ததால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் சிபிஎம் அலுவலகத்தில் புகுந்து பொருட்களை சூறையாடி உள்ளனர்.

நன்றி: நியூஸ் தமிழ் 24x7