தனியார் மருத்துவமனைகளுக்கு பறந்த ஆணை - மாநகராட்சி அதிரடி

71பார்த்தது
டெல்லியில் இயங்கி வந்த தனியார் குழந்தைகள் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 குழந்தைகள் உயிரிழந்தனர். இதன் காரணமாக திண்டுக்கல் நகரில் இயங்கி வரும் 50 தனியார் மருத்துவமனைகளில் முதற்கட்டமாக 19 மருத்துவமனைகளுக்கு மாநகராட்சி குறிப்பாணை அனுப்பியுள்ளது. அதில், மருத்துவமனையின் பாதுகாப்பு, கட்டட அனுமதி, கட்டடம் கட்டப்பட்ட ஆண்டு, வாகனங்கள் நிறுத்தும் இடம், நோயாளிகளின் படுக்கை வசதிகள் உள்ளிட்ட விபரங்களை சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

நன்றி: நியூஸ் தமிழ் 24x7

தொடர்புடைய செய்தி