சர்க்கரை நோய்க்கு நாட்டு வைத்தியம்: முதியவர் பலி

66பார்த்தது
சர்க்கரை நோய்க்கு நாட்டு வைத்தியம்: முதியவர் பலி
திருச்சி: மணப்பாறை மலைத்தத்தம்பட்டியைச் சேர்ந்தவர் ராபர்ட்சிமியன் ராஜ் (50). கடந்த 20 வருடங்களாக சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டு மாத்திரை உட்கொண்டு வருகிறார். இதனால் காலில் காயம் ஏற்பட்டு ஆறாமல் இருந்துள்ளது. இதற்காக நாட்டு வைத்தியம் பார்த்து வந்துள்ளார். இதில் அவரது உடலில் ரசாயன மாற்றம் ஏற்பட்டு உடல்நிலை மோசமானது. சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று (செப்., 25) உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி