சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நிதியுதவி அறிவிப்பு

64பார்த்தது
சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நிதியுதவி அறிவிப்பு
தருமபுரி: பாலக்கோடு அருகே நடந்த சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (ஜுலை 15) மாலை 2 தனியார் பேருந்துகள் நேருக்குநேர் மோதிய விபத்தில் 21 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இதில் பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி