மழை இல்லை! காய்ந்து போன விவசாய பயிர்கள்

62பார்த்தது
மழை இல்லை! காய்ந்து போன விவசாய பயிர்கள்
ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதி கடல் மட்டத்தில் இருந்து 1,105 மீட்டர் உயரத்தில் உள்ளது. அதை சுற்றி ஆசனூர், கேர்மாளம் என 80 கிராமங்கள் உள்ளன. இந்தாண்டு போதிய மழை இல்லாததால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் பற்றாக்குறையால் பயிர்கள் காய்ந்து வருகிறது. மழை காலங்களில் ஓடைகளில் செல்லும் தண்ணீரை தடுத்து தடுப்பணைகள் கட்டி தேக்கி வைத்தால் மட்டுமே நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி