யுஜிசி - நெட் தேர்வை போல் நீட் தேர்வை ரத்து செய்யும் எண்ணம் இல்லை என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், நீட் விவகாரத்தை அரசியலாக்க கூடாது. ஏதோ ஒரு இடத்தில் நடந்த முறைகேடு, நியாயமாகத் தேர்வு எழுதிய லட்சக்கணக்கான மாணவர்களை பாதிக்காது என கூறியுள்ளார். மேலும் தேசிய தேர்வு முகமையின் செயல்பாடு மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை ஆராய உயர்மட்ட குழு அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.