பெண் பயணிகளை ஏற்றாத அரசுப் பேருந்து ஓட்டுநர் சஸ்பெண்ட்

52பார்த்தது
பெண் பயணிகளை ஏற்றாத அரசுப் பேருந்து ஓட்டுநர் சஸ்பெண்ட்
விழுப்புரத்தில் அரசுப் பேருந்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விழுப்புரம் மண்டலம் பொது மேலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், “ஏப்ரல் 22ம் தேதி காலை 8 மணியளவில் விழுப்புரம் பைபாஸ் அண்ணாமலை ஹோட்டல் நிறுத்தத்தில் பெண் பயணிகள் கையை காட்டியும் பேருந்தை நிறுத்தாமல் சென்றதாக புகார் வந்ததன் அடிப்படையில், ஓட்டுனர் K.ஆறுமுகம் தற்காலிக வேலை நீக்கமும், நடத்துனர் தேவராசு பணிநிறுத்தமும் செய்யப்பட்டுள்ளனர்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி