ப. வேலூா் சந்தையில் நாட்டுக் கோழி கிலோ ரூ. 600

1550பார்த்தது
ப. வேலூா் சந்தையில் நாட்டுக் கோழி கிலோ ரூ. 600
பரமத்தி வேலூா் நாட்டு கோழிச் சந்தையில் நாட்டுக் கோழிகளின் விலை உயா்வடைந்துள்ளதால் கோழி வளா்ப்போா் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

பரமத்தி வேலூரில் ஞாயிற்றுக்கிழமைதோறும் நாட்டுக்கோழி சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு பரமத்தி, வேலூா், மோகனூா், கரூா், பாளையம் நாமக்கல், ஜேடா்பாளையம், சோழசிராமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான நாட்டுக் கோழிகளை விவசாயிகள், வியாபாரிகள் கொண்டு வருகின்றனா்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தைக்கு பெருவடை, கீரி, கடகநாத், அசில், மயில் காகம், கருங்கண் கருங்காலி, கிரிராஜா உள்ளிட்ட பல்வேறு வகையான கோழிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும் நாட்டுக் கோழிகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் நாமக்கல், கரூா் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோா் வந்து கோழிகளை வாங்கிச் செல்கின்றனா்.

தரமான நாட்டுக் கோழிகள் கடந்த வாரம் கிலோ ரூ. 450 வரையிலும், பண்ணைகளில் வளா்க்கப்படும் நாட்டுக் கோழிகள் கிலோ ரூ. 350 வரையிலும் விற்பனையானது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் நாட்டுக்கோழிகள் கிலோ ரூ. 600-க்கு விற்பனையானது. பண்ணை நாட்டுக் கோழிகள் ரூ. 350 வரையிலும் விற்பனையானது. சண்டைக் கோழிகள் ரூ. 2 ஆயிரம் முதல் ரூ. 5 ஆயிரம் வரை விற்பனையானது. நாட்டுக்கோழிகள் வரத்து குறைந்ததால் நாட்டுக் கோழி விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி