பரமத்திவேலூரில் பூக்கள் விலை உயர்வு

79பார்த்தது
பரமத்தி வேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் பூக்கள் விலை உயா்வடைந்துள்ளதால் அவற்றைப் பயிா் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை ரூ. 300-க்கும், சம்பங்கி கிலோ ரூ. 250-க்கும், அரளி கிலோ ரூ. 150- க்கும், ரோஜா கிலோ ரூ. 200-க்கும், முல்லைப் பூ ரூ. 400-க்கும், செவ்வந்திப்பூ ரூ. 200-க்கும், கனகாம்பரம் ரூ. 500-க்கும், காக்கரட்டான் பூ ரூ. 400- க்கும் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ. 400-க்கும், சம்பங்கி கிலோ ரூ. 320-க்கும், அரளி கிலோ ரூ. 220-க்கும், ரோஜா கிலோ ரூ. 260-க்கும், முல்லைப் பூ கிலோ ரூ. 500-க்கும், செவ்வந்திப்பூ கிலோ ரூ. 350-க்கும், கனகாம்பரம் கிலோ ரூ. 700-க்கும், காக்கரட்டான் பூ கிலோ ரூ. 700-க்கும் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன. சித்ரா பொளா்ணமியை முன்னிட்டு பூக்களின் விலை உயா்வடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா். இதனால் பூக்களைப் பயிா் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தொடர்புடைய செய்தி