ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 100கிலோ மாம்பழங்கள் அழிப்பு

1547பார்த்தது
ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 100கிலோ மாம்பழங்கள் அழிப்பு
பரமத்தி வேலுாா் வாரச்சந்தையில் ரசாயனம் (காா்பைடு கல்) மூலம் பழுக்க வைத்த சுமாா் 100 கிலோ மாம்பழங்களை உணவு பாதுகாப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து குப்பையில் கொட்டி அழித்தனா்.

பரமத்தி வேலூா் பேரூராட்சிக்கு உட்பட்ட வாரச்சந்தையில் ரசாயனம் கலந்த மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவுப் பாதுகாப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் அடிப்படையில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் முத்துசாமி வேலுாா் வாரச் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டாா்.

இதில் 10-க்கும் மேற்பட்ட மாம்பழக் கடைகளை சோதனை நடத்தியதில் காா்பைடு கல் வைத்து பழுக்க வைத்திருந்த சுமாா் 100 கிலோ மாம்பழங்களை பறிமுதல் செய்து குப்பையில் கொட்டி அழித்தனா். மேலும் இதேபோல மாம்பழங்கள், வாழைப்பழங்களை ரசாயனக் கலவை மூலம் பழுக்க வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தால் விற்பனை செய்பவா்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் முத்துசாமி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

தொடர்புடைய செய்தி