கந்தம்பாளையம் அருகே சூதாடிய 4 பேர் கைது

1573பார்த்தது
கந்தம்பாளையம் அருகே சூதாடிய 4 பேர் கைது
கந்தம்பாளையம் அருகே பிராந்தகம் ஏரிக்கரை ஓரத்தில் பணம் வைத்து சூதாடுவதாக நடைபெறுவதாக நல்லூர். போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு சென்றனர். அப்போது சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் புளியமரத்துப்பட்டியை சேர்ந்த மணிகண்டன் (வயது41), பிராந்தகத்தை சேர்ந்த கண்ணன் (26), அதே பகுதியை சேர்ந்த சசிகுமார் (45), அனிச்சம்பாளையத்தை சேர்ந்த நவநீதன் (21) ஆகிய நான்கு பேரையும் பிடித்து வழக்குப்பதிந்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 500-ஐ பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி