விசாலாட்சியம்மன் ஆலய திருவிழா

77பார்த்தது
கத்தறிப்புலம் விசாலாட்சியம்மன் ஆலய திருவிழா. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கத்தறிப்புலம் தெற்க்கு குத்தகை விசாலாட்சியம்மன் உடனுறை விசுவநாத சுவாமி ஆலய ஆண்டு திருவிழாவை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு , சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. அருசுவை அன்னதானம் , வாண வேடிக்கைகளோடு இலக்கிய சொற்பொழிவாளர் தேவி. சரவணன் தலைமையில் பள்ளி மாணவ, மாணவிகளின் கவிதை, பாட்டு , பரதநாட்டியம் , பட்டிமன்றம் உள்ளிட்ட கலை நிகழ்சிகள் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர் இராமச்சந்திரன் சிறப்பாக செய்திருந்தார். சுற்றுப்புற பகுதியிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி