தொழிலாளி இறப்பு குறித்து விசாரிக்க மனு

66பார்த்தது
தொழிலாளி இறப்பு குறித்து விசாரிக்க மனு
மயிலாடுதுறை மாவட்டம் கீழவள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த். இவர் நெஞ்சுவலி காரணமாக சீர்காழி தாலுகா கொள்ளிடம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சையின் போது மரணம் அடைந்ததை தொடர்ந்து உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தின கூலி தொழிலாளியான ஆனந்த் மரணத்திற்கு நீதி விசாரணை கேட்டு மாவட்ட ஆட்சியர் மகாபாரதியிடம் கொள்ளிடம் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சேர்ந்த ரஞ்சித், ரகுராஜ், பாரதிராஜா, தளபதி பாபு ஆகியோர் நேற்று மனு அளித்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதி அளித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி