குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் தண்ணீர்

1087பார்த்தது
மயிலாடுதுறை அருகே காளி ஊராட்சியில் கடைவீதியில் உள்ள நீர் தேக்க தொட்டியில் இருந்து செல்லும் பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சாலையில் வழிந்து ஓடுகிறது. தொடர்ந்து பல நாட்களாக தண்ணீர் வழிந்து ஓடுவதால் அப்பகுதி முழுவதும் அசுத்தமாக காணப்படுகிறது.

மேலும் கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வரும் நிலையில் ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து உடைந்த குழாயினை சரி செய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி