மயிலாடுதுறை மாவட்டம் கஞ்சா நகரத்தில் புனித அந்தோனியார் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் நேற்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அங்கப் பிரதக்ஷணம் செய்தும், முட்டி போட்டு நடந்தும் வினோத பிரார்த்தனையில் பக்தர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து பெண்கள் உட்பட ஏராளமான தங்களது வேண்டுதலை நிறைவேற்ற வேண்டி இந்தப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.