கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி மகன் கொலை

70பார்த்தது
கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி மகன் கொலை
வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர். அடிக்கடி குடித்துவிட்டு வந்து தனது தாயிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சுரேஷ் அதிகளவில் குடித்துவிட்டு, அவரது தாய் ருக்குமணி மற்றும் அவரது சகோதரி முனியம்மாளிடம் சண்டை போட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த இருவரும், கொதிக்கும் எண்ணெயை சுரேஷின் தலையில் ஊற்றியதுடன், அருகே இருந்த கல்லைக் கொண்டு தலையில் அடித்துக் கொலை செய்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக தாய் சுக்குமணி மற்றும் அவரது சகோதரி முனியம்மாளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி