தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தவர் கொலை: சிக்கிய சிறுவன்

24543பார்த்தது
தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தவர் கொலை: சிக்கிய சிறுவன்
மதுரை: சிந்துபட்டி வி.கள்ளப்பட்டியை சேர்ந்த முத்துராமன் மனைவி வளர்மதி (40). இவர்களது 17 வயது மகன் சமையல் வேலை உதவியாளராக உள்ளார். முத்துராமன் சில வருடங்களுக்கு முன் இறந்த நிலையில் வளர்மதி திருப்பூரில் வேலை செய்து வந்தார். அவரோடு திருப்பூரை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரும் வேலை செய்தார். இவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. வளர்மதி சொந்த ஊருக்கு வந்த பின்பும் ராஜ்குமார் அவ்வப்போது வந்து சென்றுள்ளார். இதையறிந்த வளர்மதியின் மகன் இருவரையும் கண்டித்துள்ளார்.

நேற்று (மே 20) வெளியே சென்று விட்டு வந்த சிறுவன் தனது வீட்டில் ராஜ்குமார் இருந்ததை பார்த்து அவரோடு தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அவரை அழைத்துக் கொண்டு அந்த பகுதியில் உள்ள மலை அடிவாரத்திற்கு சென்று இருவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது மதுபாட்டிலை உடைத்து ராஜ்குமாரை சிறுவன் குத்தியுள்ளார். இதில் கீழே விழுந்தவர் மீது கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்துள்ளார். சிறுவனை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி