காவிரி மேலாண்மை ஆணையம் இன்று கூடுகிறது

68பார்த்தது
காவிரி மேலாண்மை ஆணையம் இன்று கூடுகிறது
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30வது கூட்டம் டெல்லியில் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் இன்று (மே 21) நடைபெறவுள்ளது. கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு காவிரியில் உரிய நீரை திறந்து விட உத்தரவு பிறப்பிக்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கூடுதலாக தண்ணீர் திறந்து விடவும் தமிழக பிரதிநிதிகள் வலியுறுத்த உள்ளதாக கூறப்படுகிறது.