

உசிலம்பட்டி: 24 குழந்தைகள் காப்பகத்திலிருந்து மீட்பு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பி. செட்டியபட்டி கிராமத்தில் தனியார் விடுதி காப்பகம் உள்ளது. இதனுடன் அரசு உதவி பெறும் தனியார் நடுநிலைப்பள்ளியும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இந்த குழந்தைகள் காப்பகத்தில் கடந்த சில ஆண்டுகளாக முறையான பாதுகாப்பு மற்றும் உணவு, பராமரிப்பு வசதிகள் இன்றி இருப்பதாக எழுந்த தொடர் புகாரின் அடிப்படையில் இன்று மதுரை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் அரவிந்த் தலைமையிலான அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்த போது குழந்தைகள் உரிய பாதுகாப்பு வசதிகள் இன்றி குழந்தைகள் தங்கி இருப்பதாக தெரிய வந்த சூழலில் காப்பகத்தில் தங்கி இருந்த சுமார் 24 குழந்தைகளை மீட்டு மதுரையில் உள்ள அரசு அனுமதி பெற்ற குழந்தைகள் காப்பகங்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டனர்.