உசிலம்பட்டி பகுதியில் பள்ளி புறக்கணிப்பு போராட்டம்.

61பார்த்தது
தமிழகத்தில் கள்ளர் சீரமைப்புத்துறை மற்றும் ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளை அரசு பள்ளியுடன் இணைக்கும் நடவடிக்கைக்கு எதிராக இன்று தென் மாவட்டங்களில் உள்ள 250க்கும் மேற்பட்ட அரசு கள்ளர் பள்ளிகளில் மாணவ மாணவிகள் புறக்கணிப்பு போராட்டத்தை அனைத்து பார்வட் ப்ளாக் அமைப்பினர்களும் இணைந்து நடத்தினார்கள்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் பெரும்பாலான பள்ளிகளில் இன்று வழக்கம் போல மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வருகை தந்தனர். அவர்களை போராட்டம் என்ற பெயரில் பார்வட் ப்ளாக் கட்சியினர் தடுத்து நிறுத்தி வாசலிலேயே திருப்பி அனுப்பிய சம்பவங்கள் நடந்துள்ளது.

காவல்துறையினர் அருகில் இருந்தும், மாணவ மாணவிகளின் கல்வியை பாதிக்கும் வகையில் நடந்து கொண்ட பார்வட் ப்ளாக் கட்சியினரை கண்டு கொள்ளாமல் இருந்தது ஏன் என்று தெரியவில்லை. இதனால் மாணவ, மாணவிகள் மீண்டும் வீடுகளுக்கு திரும்பி சென்றனர்.

தொடர்புடைய செய்தி