அனுமதியின்றி நடத்தப்பட்ட மஞ்சுவிரட்டு போட்டி.!!

57பார்த்தது
மதுரை பழங்காநத்தம் பகுதியில் அனுமதியின்றி நடத்தப்பட்ட மஞ்சுவிரட்டு போட்டி- காளை மற்றும் ஐந்து இளைஞர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை

மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பவரின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி கொண்டாடும் வகையில் மதுரை போடி லைன் அருகே அனுமதி இன்றி இளைஞர்கள் மஞ்சுவிரட்டு போட்டி நடத்தப்பட்டது.

இந்த மஞ்சுவிரட்டு போட்டி காலை அதிகாலை தொடங்கியது. இந்த மஞ்சுவிரட்டு போட்டியில் பங்கேற்பதற்காக குருவித்துறை ஒத்தக்கடை புது தாமரைப்பட்டி உள்ளிட்ட மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான காளைகளை அழைத்து வந்து மஞ்சுவிரட்டு போட்டி நடத்தப்பட்டது.

அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கவே சம்பவ இடத்திற்கு வந்த எஸ் எஸ் காலனி போலீசார் காளை மற்றும் ஐந்து இளைஞர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை போடி லைன் அருகே அனுமதியின்றி இளைஞர்களாக இணைந்து மஞ்சுவிரட்டு போட்டி நடத்திய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி