தமிழ்நாட்டில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு வரும் மே மாதம் இடைத்தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் காலியாக உள்ள 133 இடங்கள், ஊரக உள்ளாட்சிகளில் உள்ள 315 இடங்களுக்கு தேர்தல் நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தலுக்கான முன்னேற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.