இளையராஜா இசையமைத்த முதல் படமான 'அன்னக்கிளி' வெளியானபோது அவருக்கு வயது 32. முதல் படத்திலேயே அவர் வெற்றிகரமான இசையமைப்பாளராகிவிட்டார். முதல் ஐந்தாண்டுகளுக்குள் 100 படங்களுக்கு இசையமைத்துவிட்டார். பொதுவாக இந்தியச் சமூகத்தில் 20களின் பிற்பகுதிகளுக்குள் செட்டிலாக முடியாதவர்கள் பலர் வாழ்வை இழந்துவிட்டதாக மற்றவர்களால் முத்திரை குத்தப்படுவார்கள். ஆனால், பயணம் எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம். அது எப்படி அமைகிறது என்பதும் அடையப்போகும் இலக்குகளுமே ஒருவரின் வாழ்வின் வெற்றி தோல்வியையும் அதைத் தாண்டிய முக்கியத்துவத்தையும் தீர்மானிக்கிறது என்பதற்கு இளையராஜாவே சான்று.