மத்தூர் அருகே கார் மோதி சிறுவன் உயிரிழப்பு

81பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (40) தென்னை மரம் ஏறும் தொழிலாளி இவருடைய மகன் ஹரிபிரசாத் இந்த நிலையில் அந்த பகுதியில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. அப்போது அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த கார் ஹரி பிரசாத் மீது மோதியது இதில் சிறுவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த மத்தூர் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி