வாக்களிக்க செல்லாமல் தேர்தல் புறக்கணிப்பு

2604பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதூர் பேரூராட்சிக்குட்பட்ட சுப்பன் ஆசாரி களத்தில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு தார்சாலை, தெருவிளக்கு அமைத்து தரவேண்டி நீண்டநாள் கோரிக்கையாக வைத்து, பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

இதுவரை அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி மக்கள் சாதிய பாகுபாட்டுடன் ஆதிக்கம் செய்யும் சாதி வெறியர்களுக்கு துணைபோகும் கரூர் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் சார்பில் அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடி கட்டி வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் புறக்கணிப்பு மற்றும் எங்களை கருணை கொலை செய்யுங்கள் என அறிவிப்பு பேனர்கள் வைத்து எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் வாக்குப்பதிவு நாளான இன்று (19.04.2024) அப்பகுதியை சேர்ந்த 80 வாக்காளர்கள் வாக்களிக்க செல்லாமல் வீட்டில் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி