எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரையில் லைட் - திமுக அதிமுக தர்ணா

70பார்த்தது
மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யப் படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வரும் நிலையில், தற்போது எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரையில் வாக்கு விழுவதாக சென்னையில் திமுக மற்றும் அதிமுக பூத் முகவர்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். வியாசர்பாடி எம்.கே.பி நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியின் 150வது வாக்குச் சாவடியில் வாக்களிக்க வந்த சிலர் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரையில் ஓட்டு விழுவதாக புகாரளித்தனர். இதைத்தொடர்ந்து திமுக அதிமுக கட்சியினர் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி