சாலையின் தடுப்பில் மோதி கொத்தனார் பலி

1538பார்த்தது
சாலையின் தடுப்பில் மோதி கொத்தனார் பலி
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் அருண்குமார் (26). கொத்தனார் வேலை பார்த்து வந்த இவர் நேற்று தனது பைக்கில் பின்னால் தினேஷ் என்பவரை அமர வைத்து கொண்டு காணியாளம்பட்டி சாலையில் அதிவேகமாக சென்றுள்ளார். அப்போது திடீரென் கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையில் தடுப்பில் மோதியது. இந்த விபத்தில் அருண்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தினேஷ் அளித்த புகாரின் பேரில் மாயனூர் போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி