விவசாய முன்னேற்றக் கழக வேட்பாளர் புலியூரில் வாக்கு சேகரிப்பு

70பார்த்தது
புலியூர் கடைவீதியில் விவசாயம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் சக்திவேல் ஏப்ரல் 15 ஆம் தேதி சனிக்கிழமை மாலை ஆறு மணி அளவில் நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.


வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சியில் விவசாய முன்னேற்ற கழகத்தின் தலைவர் செல்லராசாமணி கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் ஐயப்பன் ரமேஷ் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகள் விஜயகுமார் சக்கரவர்த்தி வேலூர் மாவட்ட நிர்வாகிகள் ரமேஷ் கார்த்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

விவசாய விலை பொருட்களுக்கு உரிய விலை நிர்ணயித்திட அரசு மதுபான கொள்கையில் திருத்தம் மேற்கொண்டு, தென்னை மர கள் விற்பனை செய்திட, விவசாய முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சக்திவேலுக்கு கரும்பு விவசாயி சின்னத்தில் வாக்களிக்குமாறு பொதுமக்களுக்கு வேட்பாளர் வேண்டுகோள் விடுத்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி