கரூரில் சாமானிய மக்கள் நலக்கட்சி வாக்கு சேகரிப்பு

60பார்த்தது
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட உழவர் சந்தை பேருந்து நிறுத்தத்தில் சாமானிய மக்கள் நலக் கட்சி சார்பில் கரூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சண்முகம் மோதிரம் சின்னத்திற்கு இன்று இரவு 7 மணியளவில், வாக்கு சேகரித்தார்.

இந்நிகழ்ச்சியில் சாமானிய மக்கள் நலக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் குணசேகரன் கலந்து கொண்டு சண்முகத்திற்கு, ஆதரவு கேட்டு பேசினார்.

மத்தியில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்று தீர்மானிக்கக்கூடிய தேர்தலாக இருப்பதால் மக்கள் நல்லவர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்ய வேண்டும்.

இந்த தேர்தலில் யார் மீண்டும் ஆட்சி அமைக்க கூடாது என்பதை மக்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்று பேசினார்.

இந்நிகழ்ச்சியில் சாமானிய மக்கள் நலக் கட்சியின் நிர்வாகிகள் தென்னரசு மோகன்ராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி