மூட்டு வலியால் அவதிப்பட்ட முதியவர் விஷம் குடித்து தற்கொலை

1571பார்த்தது
மூட்டு வலியால் அவதிப்பட்ட முதியவர் விஷம் குடித்து தற்கொலை
கரூர் மாவட்டம், தாந்தோணிமலை அருகே உள்ள சத்தியமூர்த்தி நகர், 2வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் அல்லி முத்து வயது 66.இவர் கடந்த 15 ஆண்டுகளாக மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல மருத்துவமனைகளில் அவர் சிகிச்சை பெற்றும் அவருக்கு குணமாகவில்லை.

இதனால், விரத்தியான மனநிலையில் வாழ்ந்து வந்த அல்லி முத்து பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை அறிந்த அவரது மகன், அருண் வயது 28 என்பவர், உடனடியாக தனது தந்தையை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

அங்கு சிகிச்சையில் இருந்து வந்த அல்லி முத்து சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து, அருண் தாந்தோணி மலை காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த அல்லி முத்துவின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தாந்தோணிமலை காவல்துறையினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி