சரக்கு வாகனம் புளிய மரத்தில் மோதி கவிழ்ந்து விபத்து.

1883பார்த்தது
தந்தை மகன் சென்ற சரக்கு வாகனம், புளிய மரத்தில் மோதி கவிழ்ந்து விபத்து.

கரூர் மாவட்டம், தாந்தோணிமலை, வடக்கு கணபதிபாளையம், ஓம் சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் மறைந்த தங்கராஜ் மகன் பாலசுப்பிரமணியம் வயது 49. இவரது மகன் அஸ்வின் வயது 19. இவர்கள் இருவரும் மார்ச் 12ஆம் தேதி நள்ளிரவு 2 1/4 மணி அளவில், திண்டுக்கல் - கரூர் சாலையில், டாடா ஏஸ் வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.

இந்த டாட்டா ஏஸ் வாகனத்தை, கரூர், தாந்தோணிமலை, பாரதிதாசன் நகர் பகுதியை சேர்ந்த ராஜு மகன்
பாலமாணிக்கம் வயது 26 என்பவர் ஓட்டி வந்தார்.இந்த வாகனம் தாந்தோணி மலை வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே வந்தபோது, சரக்கு வாகனத்தை வேகமாக செலுத்தியதால், கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர புளிய மரத்தின் மீது மோதி சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் சரக்கு வாகனத்தில் பயணித்த அஸ்வினுக்கு இடது கை மற்றும் இடது காலில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் குறித்து பாலசுப்பிரமணி அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர், சரக்கு வாகனத்தை வேகமாக ஓட்டி விபத்து ஏற்பட காரணமான பாலமாணிக்கம் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் தாந்தோணிமலை காவல்துறையினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி