இளநிலை நீட் தேர்வு முடிவுகளை வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவு

75பார்த்தது
இளநிலை நீட் தேர்வு முடிவுகளை வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவு
நடந்து முடிந்த இளநிலை நீட் தேர்வு முடிவுகளை நகரங்கள் வாரியாக, மையங்கள் வாரியாக வெளியிட தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் வினாத்தாள் முறைகேடு வழக்கில், மாணவர்களின் அடையாளத்தை மட்டும் மறைத்து தேர்வு முடிவுகளை நாளை மாலைக்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என தலைமை நீதிபதி உத்தரவிட்ட நிலையில், தேசிய தேர்வு முகமையின் கோரிக்கையை ஏற்று வரும் 20ம் தேதி பிற்பகல் வரை காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.