தளவாபாளையம் அருகே டூ வீலர்- கார் நேருக்கு நேர் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.
கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, தளவாபாளையம் அருகே உள்ள பிலிப் நகரை சேர்ந்தவர் சுரேஷ் வயது 48.
இவர் ஏப்ரல் 8-ம் தேதி இரவு 8: 15 மணி அளவில், தளவாபாளையத்தில் இருந்து கரூர் செல்லும் சாலையில் அவரது எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.
இவரது வாகனம் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே சென்றபோது, எதிர் திசையில், தளவாபாளையம் அருகே தோட்டக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி வயது 74 என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார், சுரேஷ் ஓட்டிச் சென்ற எலக்ட்ரிக் டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சுரேஷை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக சுரேஷ் அளித்த புகாரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், காரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.
.