தீ பற்றியதால் முதியவர் உயிரிழப்பு. மகன் புகாரில் வழக்குபதிவு

63பார்த்தது
தீ பற்றியதால் முதியவர் உயிரிழப்பு. மகன் புகாரில் வழக்குபதிவு
தீ பற்றியதால் முதியவர் உயிரிழப்பு. மகன் அளித்த புகாரில் காவல்துறை வழக்குப்பதிவு


கரூர் மாவட்டம், சின்னத்தாராபுரம் அருகே உள்ள T. வெங்கடாபுரம் பகுதியில் வசிப்பவர் மணிமாறன்.

இவர் கரூர் மாநகராட்சி குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரிந்து வந்தார்.

இவர் ஏப்ரல் 28ஆம் தேதி காலை 7: 30- மணி அளவில், அவருக்கு சொந்தமான 2- ஏக்கர் நிலத்தில் உள்ள புற்களை அகற்ற தோட்டத்திற்கு தீ வைத்தார்.

தோட்டத்திற்கு வைத்த தீ சுற்றியும் பரவியதால், உள்ளே சென்ற மணிமாறன் வெளியே வர முடியாமல் தீ வளையத்திற்குள் மாட்டி தீக்காயம் அடைந்து உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அறிந்த அவரது மகன் தீனதயாளன் வயது 26 என்பவர் அளித்த புகாரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த மணிமாறன் உடலை, உடற்கூறு ஆய்வுக்காக, அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சின்னதாராபுரம் காவல்துறையினர்.

தொடர்புடைய செய்தி