தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற நபர் கைது

66பார்த்தது
தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற நபர் கைது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ரத்தினம்பிள்ளைபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன் மகன் சந்தனம் (39). இவர் கருங்கலாப்பள்ளி கடைவீதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்த குளித்தலை போலீசார் லாட்டரி சீட்டு விற்ற சந்தனம் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 10 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி