அதிமுக முன்னாள் அமைச்சர் மீது ஜோதிமணி குற்றச்சாட்டு

77பார்த்தது
கரூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர் ஜோதிமணி இன்று கரூர் மேற்கு ஒன்றியத்துக்கு, உட்பட்ட அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி திருக்காடுதுறை ஊராட்சியில் ஆலமரத்துமேடு, பேருந்து நிலையத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி பேசுகையில் 100 நாள் வேலை திட்டம் பணியாளர்களுக்கு 400 ஊதியம் வழங்குவதற்கு காங்கிரஸ் ஆட்சி உறுதி அளித்துள்ளது இத்திட்டத்தை சோனியாகாந்தி வறுமையை ஒழிப்பதற்காக கொண்டு வந்தார்.

அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் போக்குவரத்து துறையில் அமைச்சராக இருந்த பொழுது 2000 கோடிக்கு மேல் ஸ்டிக்கர் ஒட்டுவதில் ஊழல் செய்துள்ளார் இன்று பிரச்சாரத்தில் குற்றம் சாட்டினார்.

ராகுல் காந்தி பிரதமராக நிச்சியம் வருவார் தேர்தலில் காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணி நிச்சயம் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும் என்று பேசினார்.

இந்நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ திராவிட முன்னேற்றக் கழக கரூர் மேற்கு ஒன்றிய செயலாளர் திருமதி வளர்மதி சிதம்பரம், திராவிட கழக மாவட்ட தலைவர் குமாரசாமி காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் சின்னச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி