தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் காலையில் வெயிலும் மாலை வேளைகளில் சூறை காற்றுடன் கன மழையும் பெய்து வருகின்றன.
இந்த நிலையில் நேற்று முன்தினம்
சூறை காற்றும் வீசி வருவதால் பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்து சேதம் ஏற்பட்டு வரும் நிலையில்
தெற்றிகோடு பகுதியில் தாசையன் என்ற விவசாயி ஒரு ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து நடவு செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான குலை தள்ளிய எத்தன் வாழைகள் முறிந்து விழுந்து சேதம் ஏற்பட்டுள்ளன.
இனியும் இரண்டு மாதத்தில் வாழைத்தார் அறுவடை செய்யும் நிலையில் முறிந்து விழுந்ததால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.