ஆசாரிபள்ளம் அருகே பிணமாக கிடந்தவர் பெயிண்டர்.

1891பார்த்தது
ஆசாரிபள்ளம் அருகே பிணமாக கிடந்தவர் பெயிண்டர்.
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி அருகே பஸ்
நிறுத்தத்தையொட்டி உள்ள சாலையில் கடந்த 28-ந் தேதியன்று 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதனைக்கண்ட பொதுமக்கள் இதுபற்றி ஆசாரிபள்ளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக
ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக கிடந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், பிணமாக கிடந்தவர் நாகர்கோவில் பார்வதிபுரத்தை சேர்ந்த கிங்ஸ்லி ஜேக்கப் (வயது 49) என்பதும், ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்தவர் திடீரென மயங்கி விழுந்து இறந்ததும் தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி