மணவாளக்குறிச்சியில் காரை நிறுத்துவதில் இரு தரப்பினர் மோதல்

51பார்த்தது
மணவாளக்குறிச்சியில் காரை நிறுத்துவதில் இரு தரப்பினர் மோதல்
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே ஆறாம்விளை பகுதியை சேர்ந்தவர் சகாயராஜ். இவரது மனைவி மரிய கொரட்டி (52). இவர்களுக்கும், அதே பகுதியை சேர்ந்த ராஜேஷிக்கும்(40) இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 11ம் தேதி இரவு ராஜேஷ் அப்பகுதியில் காரை நிறுத்தி உள்ளார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஊர் பெரியவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மீண்டும் ராஜேஷ் தரப்பினர் சகாயராஜ் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தகராறு செய்துள்ளனர். மேலும் ஆத்திரம் அடைந்த அவர்கள் மரிய கொரட்டி, சகாயராஜ், மகள் நோயல் பெனிட்டா ஆகியோரை தாக்கி உள்ளனர். இதையடுத்து சகாயராஜ் தரப்பினரும் திருப்பி தாக்கி உள்ளனர். இதுதொடர்பாக இரு தரப்பினரும் மணவாளக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனில் தனித்தனியாக புகார் செய்தனர். இதனடிப்படையில் போலீசார் இருதரப்பபை சேர்ந்த 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி