மினி பஸ் டிரைவர் மீது தாக்குதல்: பயணிகளை ஏற்றுவதில் தகராறு

567பார்த்தது
மினி பஸ் டிரைவர் மீது தாக்குதல்: பயணிகளை ஏற்றுவதில் தகராறு
திங்கள்சந்தையில் இருந்து வெள்ளிமலை செல்லும் மினி பஸ் நேற்று இரவு பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தது. அந்த பஸ்ஸில் மணி (34) என்பவர் டிரைவர் ஆக இருந்தார்.

       அப்போது அங்கு வந்த மற்றொரு மினி பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் பயணிகளை ஏற்றி செல்வது  தொடர்பாக வெள்ளிமலை மினி பஸ் டிரைவர் மணியிடம் தகராறு செய்துள்ளனர். இதில் அவர்களுக்கு வாக்குவாதம் முற்றிய நிலையில் மினி பஸ் டிரைவர் கண்டக்டர் சேர்ந்து மணியை தாகிகி காயப்படுத்தியுள்ளனர்.

       இதில் படுகாயம் அடைந்த டிரைவர் மணியை சக டிரைவர்கள் கண்டக்டர் மீட்டு குளச்சல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக  சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி