நெல்லை சாலை விபத்து: குமரியை சேர்ந்த அக்கா தம்பி உயிரிழப்பு

61பார்த்தது
கன்னியாகுமாரி மாவட்டம் களியக்காவிளை அருகே குளப்புறம் பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திர சிங்(50). இவர் அரசு பஸ் டிரைவர். இவரது மனைவி, மகள் மற்றும் அக்கா ஜெயந்தி. (55) என்பவருடன் ஈரோட்டில் உள்ள ஒரு மெடிக்கல் காலேஜில் மகளை சேர்க்க சென்றுள்ளனர்.
அங்கு சென்று அட்மிஷன் போட்ட பின், 4 பேரும் காரில்
இன்று (3-ம் தேதி) அதிகாலை தங்களது சொந்த ஊருக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.
அதிகாலை 1: 30 மணி அளவில் திருநெல்வேலி - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் பாளையங்கோட்டை அருகே உள்ள ரெட்டியார்பட்டி நான்கு வழிச்சாலையில் சென்றபோது முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியின் மீது இவர்கள் சென்ற கார் மோதியதாகவும் கூறப்படுகிறது.

இதில் காரில் இருந்த ஜெயச்சந்திர சிங் மற்றும் ஜெயந்தி ஆகிய இருவரும் காரின் உள்ளேயே சம்பவ இடத்திலேயே நசுங்கி உயிரிழந்தனர். மனைவி மகள் காயமடைந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி