கன்னியாகுமரி மாவட்டம் கீழப்புத்தேரி பத்திரகாளி அம்மன் கோயில் பகுதியில் உள்ள களத்தில் வைக்கோல் போர் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த வைக்கோல் போர் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. உடனே தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் போராடி தீயை அணைத்தனர். எனவே மேலும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுதியுள்ளது.