குமரி: டெம்போ டிரைவரை தாக்கி பணம் பறிப்பு வாலிபர் கைது.

61பார்த்தது
அஞ்சுகிராமம் அருகே லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் மகேஷ் (வயது28), டெம்போ டிரைவர். சம்பவத்தன்று காணிமடம் நாற்கரச்சாலை அருகே உள்ள ஒரு கடையின் அருகில் டெம்போவை நிறுத்திவிட்டு சென்றார். திரும்பி வரும்போது மேட்டுக்குடியிருப்பைச் சேர்ந்த அன்பு(25) என்பவர் டெம்போவுக்குள் இருந்த மகேஷின் பர்சை எடுத்துள்ளார். இதைக்கண்டு தடுத்த மகேசை, அன்பு கல்லால் தாக்கியுள்ளார். மேலும் பர்சில் இருந்த ரூ. 2, 300-யை பறித்து விட்டு கொலை மிரட்டல் விடுத்து தப்பிச்சென்றார். இதில் காயமடைந்த மகேஷ் லெவிஞ்சிபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மகேஷ் கொடுத்த புகாரின் பேரில் அஞ்சுகிராமம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எட்வர்ட் பிரைட் வழக்குப்பதிவு செய்து அன்பை கைது செய்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி