கனியாமூர் பள்ளி கலவரம் தொடர்பாக நடந்து வரும் விசாரணையின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்து 20 மாதங்கள் கடந்த போதும், வன்முறைக்கு காரணமானவர்கள் யாரும் விசாரணை செய்யப்படவில்லை என பள்ளியின் தாளாளர் ரவிக்குமார் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை இன்று (மார்ச் 29) விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், விசாரணை நிலை குறித்து ஏப்ரல் 22ம் தேதிக்குள் பதிலளிக்க சிறப்பு புலனாய்வு குழுவிற்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.