தேசிய நெடுஞ்சாலையில் புகைமூட்டம் வாகன ஓட்டிகள் கடும் அவதி

68பார்த்தது
செங்கல்பட்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் புகைமூட்டம் வாகன ஓட்டிகள் கடும் அவதி

செங்கல்பட்டு அடுத்த பழவேலியில் சாலை ஓரம் கொட்டப்பட்டுள்ள குப்பைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர் இதனால் குப்பை தீ பற்றி எரிந்து வருகின்றது

இந்த தீ விபத்து காரணமாக சென்னை - திருச்சி சாலை முழுவதுமாக புகைமூட்டத்துடன் காணப்படுகின்றது சாலை தெரியாத அளவிற்க்கு புகை சூழ்ந்துள்ளதால் சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்கை எரியவிட்டபடி செல்கின்றனர்

உடனடியாக செங்கல்பட்டு தீயனைப்புதுறை வீரர்கள் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை சாலை ஓரமாக பற்றி எரியும் குப்பையை உடனடியாய தீயை அனைக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர். இல்லை என்றால் விபத்துக்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது கடந்த பத்து நாட்களில் மட்டும் சாலை விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்

எனவே பெரும் விபத்துக்கள் நடைபெறும் முன்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் தேசிய நெடுஞ்சாலை சாலை ஒரம் குப்பைக்கு தீ வைத்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி