எஸ். ஆர். எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா

54பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் அருகே அமைந்துள்ள எஸ். ஆர். எம் அறிவியல் மற்றும் கலை கல்லூரியில் 31ஆம் ஆண்டு ஆண்டுவிழா கல்லூரி வளாகத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது

கல்லூரியின் முதல்வர் வாசுதேவராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் கல்லூரியின் துணை முதல்வர் மதியழகன் அனைவரையும் வரவேற்றார்.

இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக (ZOHO) சோஹோ நிறுவனத்தின் உலகளாவிய தலைவர் தினேஷ் கண்ணா ராமலிங்கம் அவர்கள் கலந்து கொண்டு சிற்ப்புரையாற்றினார்

கல்லூரியின் இயக்குனர் (director) ராமச்சந்திரன் முன்னிலை வகித்து மாணவ மாணவியர்கள் முன்னிலையில் சிறப்புரை ஆற்றினார்.

ஆண்டு விழாவில் கல்லூரியில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கும் தனித்தனி பாடத்தில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கும், விடுமுறை எடுக்காமல் வந்த மாணவ மாணவியர்களுக்கும் கேடயங்களும் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டது

முன்னதாக எஸ். ஆர். எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காட்சி தகவல் துறையில் 3ஆம் ஆண்டு படிக்கும் கோமதி என்கிற மாணவி தமிழ் உலகம் என்ற நூலினை எழுதியுள்ளார்.
அந்த நூல் இந்த ஆண்டு விழாவில்
சிறப்பு அழைப்பாளர்கள் முன்னிலையில் மேடையில் வெளியிடப்பட்டுள்ளது

முன்னதாக பேசிய கல்லூரி முதல்வர் வாசுதேவராஜ் அவர்கள் சான்றிதழ் மற்றும் கேடயம் வாங்கிய மாணவர்களை பாராட்டினார்.

தொடர்புடைய செய்தி