குடிநீர் திட்ட பேச்சு வார்த்தையில் ஆர்ப்பாட்டம் செய்த மக்கள்

56பார்த்தது
திருப்போரூர் பி டி ஒ அலுவலகத்தில் கூட்டு குடிநீர் திட்ட அமைதி பேச்சு வார்த்தையில் ஆர்ப்பாட்டம் செய்த கேளம்பாக்கம் ஊராட்சி மக்கள்

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம், கேளம்பாக்கம் ஊராட்சியில் உள்ள வண்ணான் ஏரியில், கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த அதிகாரிகள் முடிவு செய்து, ஏரியில் இயந்திரங்கள் மூலம் மண் மற்றும் நீர் பரிசோதனை பணி மேற்கொண்டனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், இதற்கான கருத்துகேட்பு கூட்டம் திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் செங்கல்பட்டு சார் ஆட்சியர் நாராயண சர்மா தலைமையில் நடைபெற்றது திருப்போரூர் ஒன்றிய சேர்மன் எஸ் ஆர் எல் இதயவர்மன் உட்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கேளம்பாக்கம் பொதுமக்கள் கலந்துகொண்டு பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர்
இதற்கிடையில், சார் ஆட்சியர், ஏற்கனவே கூறிய கருத்தை மீண்டும் கூறாதீர்கள் என கூறியதால் மக்கள் ஆத்திரமடைந்து கூட்டத்தை பாதியில் புறக்கணித்து வெளியே சென்றனர். பின் பி டி ஒ அலுவலக நுழைவாயில் முன்பு கூட்டுக் குடிநீர் திட்டத்தை கைவிடகோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர் தொடர்ந்து, தங்கள் கோரிக்கை மனுவை சார் ஆட்சியரிடம் வழங்கினர்.

தொடர்புடைய செய்தி